திருமண நாள் கொண்டாடுவது குறித்து எழுந்த தகராறு : தூக்கில் தொங்கிய மனைவி!

 

திருமண நாள் கொண்டாடுவது குறித்து எழுந்த தகராறு : தூக்கில் தொங்கிய மனைவி!

திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கங்கா நகரை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வரும் இவருக்கு சந்தியா என்ற பெண்ணுடன் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களின் திருமண நாள் நேற்று முன்தினம் வந்தது. திருமண நாளை தனது தாய் வீட்டில் கொண்டாடலாம் என சுரேஷ் கூறியுள்ளார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் வீண் ஆடம்பரம் வேண்டாம் என்று சந்தியா மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

திருமண நாள் கொண்டாடுவது குறித்து எழுந்த தகராறு : தூக்கில் தொங்கிய மனைவி!

இதையடுத்து சுரேஷ் பணிக்கு சென்றுவிட சந்தியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை மனைவி சந்தியாவுக்கு கணவர் சுரேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது சந்தியா செல்போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சுரேஷ் தனது தாய்க்கு போன் செய்து வீட்டிற்கு சென்று மனைவி சந்தியாவை பார்க்குமாறு கூறியுள்ளார். இத்ன் காரணமாக சுரேஷின் தாய், வீட்டிற்கு சென்று பார்த்தபோது சந்தியா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்தியாவின் உடல் மீட்கப்பட்டது.

திருமண நாள் கொண்டாடுவது குறித்து எழுந்த தகராறு : தூக்கில் தொங்கிய மனைவி!

இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.