18 ஆம் தேதி வரை… இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : உஷார் மக்களே!!

 

18 ஆம் தேதி வரை… இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : உஷார் மக்களே!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

18 ஆம் தேதி வரை… இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : உஷார் மக்களே!!

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை ,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் ,தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் வருகின்ற 16ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் ,உள் மாவட்டங்கள் ,நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18 ஆம் தேதி வரை… இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் : உஷார் மக்களே!!

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை ஒடிசா மற்றும் கடலோர ஆந்திர கடலோரப் பகுதி, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.