‘இன்று முதல் 5 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

‘இன்று முதல் 5 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

‘இன்று முதல் 5 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகின்ற 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய ஒரு சில உள் மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

‘இன்று முதல் 5 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகின்ற 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி மாவட்ட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘இன்று முதல் 5 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். இன்று முதல் வருகின்ற 7ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,