“தமிழ்நாட்டுக்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம்” : மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

 

“தமிழ்நாட்டுக்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம்” : மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

“தமிழ்நாட்டுக்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம்” : மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

புதுடெல்லி : காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், 9000 கோடி ரூபாய்க்கு புதிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே சமயம் இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்ட அனுமதிக்கு எந்தவிதமான ஒப்புதலும் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து மத்திய அரசிடம் மேகதாது அணைக்கட்ட அனுமதி கேட்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தது.

“தமிழ்நாட்டுக்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம்” : மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

இந்நிலையில் காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மேகதாது அணை கட்ட கூடாது என எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பியும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, “மேகதாது அணையை கட்டக் கூடாது என் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை. இதனால் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தைப் பிரதமரிடம் வழங்கினோம். அப்போது தமிழகத்திற்குப் பாதகமான முடிவை மத்திய அரசு எடுக்காது என்று உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.