“திமுக கூட்டணியில், எங்கள் கட்சி வலிமைக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவோம்” – ஈஸ்வரன் பேட்டி

 

“திமுக கூட்டணியில், எங்கள் கட்சி வலிமைக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவோம்” – ஈஸ்வரன் பேட்டி

ஈரோடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அதன் வலிமைக்கு ஏற்ப கூட்டணியில் தொகுதியை பெற்று, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொங்கு மண்டலத்தில் ஐ.டி.பி.எல். திட்டம், உயர் மின்கோபுரம், நூல் விலையேற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கும்போது, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் எந்த அறிவிப்பையும் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினார்.

“திமுக கூட்டணியில், எங்கள் கட்சி வலிமைக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவோம்” – ஈஸ்வரன் பேட்டி

மேலும், சட்டமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. தனித்தும், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முதல்வர் பேசி இருப்பதாகவும், ஆனால் இன்னும் சில நாட்கள் பொறுத்தால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியவரும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டிருப்பதாகவும், தமது கட்சியின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தங்களுடைய வலிமைக்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.