’’மனுநீதியை முறியடிப்போம்’’- தஞ்சையில் முழக்கம்
Sep 17, 2020, 16:58 IST1600342135000
தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது
அப்போது, புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் என சூளுரைக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் முன்பு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் சமூக நீதியை நிலைநாட்டுவோம், மனுநீதியை முறியடிப்போம் இந்துத்துவாவை முறியடிப்போம் நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என முழக்கங்கள் செய்தனர் இதில் நிர்வாகிகள் பழனிராஜன் அமர்சிங் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்