‘அதிமுக கூட்டணியில் நீடிப்போம்’ : ஜி.கே.வாசன் உறுதி!

 

‘அதிமுக கூட்டணியில் நீடிப்போம்’ : ஜி.கே.வாசன் உறுதி!

சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

‘அதிமுக கூட்டணியில் நீடிப்போம்’ : ஜி.கே.வாசன் உறுதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட நகர்வு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அதிமுக கூட்டணியில் நீடிப்போம்’ : ஜி.கே.வாசன் உறுதி!

திமுகவில் விடுதலை சிறுத்தைகள் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுகவில் பாஜக இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் தொகுதி பங்கீடு தொடர்பாக இவ்விரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடிக்கிறது.

‘அதிமுக கூட்டணியில் நீடிப்போம்’ : ஜி.கே.வாசன் உறுதி!

இந்நிலையில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் என்றும் தேர்தலில் போட்டியிட சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்று ஜி.கே.வாசன் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது கூட்டணியையும் உறுதிப்படுத்தியுள்ளார்.