“எங்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு உத்தரவிட சொன்ன மூன்றாம் பாலினத்தவர்கள்!

 

“எங்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு உத்தரவிட சொன்ன மூன்றாம் பாலினத்தவர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

“எங்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு உத்தரவிட சொன்ன மூன்றாம் பாலினத்தவர்கள்!

கொரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவ தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள போதும், 11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. 2,541 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை.

“எங்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு உத்தரவிட சொன்ன மூன்றாம் பாலினத்தவர்கள்!

தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளது. ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.