“பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்” – கமல்ஹாசன்

 

“பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்” – கமல்ஹாசன்

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் என்று கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. கிராம சபை கூட்டங்களை பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம். உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற பாதையை நோக்கி நகர்த்தும் மக்கள் நீதி மய்யத்தில் முதன்மையான அரசியல் செயல்பாடுகளில் ஒன்று. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படுத்துவதற்கு இருக்கும் பல தடைகள் முக்கியமான ஒன்று. நிதி ஆதாரம் இல்லாமல் விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உள்ளாட்சி நிதி ஒதுக்கீட்டு முறை குறித்து சிந்திப்பது அவசியம் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்” – கமல்ஹாசன்

இந்த சூழலில் மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்கட்சி அரசுகளுக்கு எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற தெளிவான விவரம் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று கமலஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பின்பற்றலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரள அரசின் பட்ஜெட்டில் இணைப்பு அறிக்கை 4 என்பது ஒரு சுயாட்சி அரசுகளுக்கான நிதிப் பகிர்வை தெளிவாக குறிப்பிட்டு இருக்கும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை ஆதாரமாகக்கொண்டு உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தேவையான காலத்தில் கிடைக்காவிட்டால் மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கும். குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கி விடும் இந்த காலத்தில் ஊரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊராட்சிகளுக்கு உத்தரவு வழங்க அரசு அதற்கான நிதியை உரிய காலத்தில் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

“பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்” – கமல்ஹாசன்

உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதைப் பிரகடனப்படுத்தும் தமிழக அரசு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட சீரமைப்பு களை மேற்கொள்ள வேண்டும். கேரள முதலமைச்சரின் நிவாரண நிதி இணைய தளம் சிறப்பாக இருக்கிறது என்று அந்த நடைமுறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுபோல பட்ஜெட்டின் போது ஊராட்சி அரசுகளுக்கான நிதி பகிர்வு குறித்த தெளிவான விவரங்களை தனியாக ஓர் இணைப்பு அறிக்கையாக வெளியிட வேண்டும். மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா, மா பொ சிவஞானம், கலைஞர் மு கருணாநிதி போன்றவர்கள் மாநில சுயாட்சி காண பாதைகளை முன்னெடுத்தவர்கள் . அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்பு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் இருந்து தொடங்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.