“ஸ்கூல் பசங்களா அவுங்க ,பலான பசங்க” -கர்ப்பிணி பெண்ணை நாசம் செய்தார்கள் -குடும்பத்தோடு தற்கொலை செய்ய வைத்தார்கள்.
ஹரியானா மாநிலம் ஹிஸாரில் ஒரு கூலி தொழிலாளியின் மனைவி கர்ப்பமாக உள்ளார் .இந்நிலையில்,அவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும் வேளைக்கு சென்றுள்ளார் .அப்போது ஆகஸ்ட் 15ம் தேதியன்று அந்த ஊரை சேர்ந்த இரண்டு மைனர் சிறுவர்கள் தனியே இருந்த அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார்கள் .
பிறகு வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பிய கணவனிடம் அந்த கர்ப்பிணி மனைவி அழுதுகொண்டே தன்னை இரண்டு மைனர் சிறுவர்கள் பலாத்காரம் செய்த விஷயத்தை கூறியுள்ளார் .
இதனால் மனமுடைந்த அந்த கூலி தொழிலாளி ,உடனே ஒரு தற்கொலை குறிப்பை எழுதினார்.அதில் எங்களுக்கு இப்போதிருக்கும் சூழலில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை .அதனால் நானும் எனது மனைவி மற்றும் குழந்தையோடு இறந்து போகிறேன் என்று எழுதிவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் . .
பிறகு இந்த விஷயம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி,மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் .