ஐபிஎல் 2020 தொடரை நடத்த எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் முயற்சித்து வருகிறோம் – சவுரவ் கங்குலி அறிவிப்பு

 

ஐபிஎல் 2020 தொடரை நடத்த எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் முயற்சித்து வருகிறோம் – சவுரவ் கங்குலி அறிவிப்பு

டெல்லி: ஐபிஎல் 2020 தொடரை நடத்த எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் முயற்சித்து வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரை நடத்த எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் முயற்சித்து வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஐபிஎல் 2020 தொடரை நடத்த எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் முயற்சித்து வருகிறோம். இந்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள், அணி உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அவர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளின் எதிர்கால நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்யும்” என்றார்.