தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

 

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கபினி அணையும், கிருஷ்ணசாகர் நிரம்பும் நிலையில் இருப்பதால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

காவிரி ஆற்றில் நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டு வருவதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டளுக்கு நீர் வரத்து 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை எட்டியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 135.25 கனஅடியாக இருக்கும் நிலையில், நீர் இருப்பு 5,929 மில்லியன் கனஅடியாக இருக்கிறது.