பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஈரோடு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி விளங்குகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 266 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.