பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Sep 10, 2020, 18:59 IST1599744595000
ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்யாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 99. 14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2766 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 550 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 2,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு