வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை : அரசு அதிகாரி கைது!

 

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை :  அரசு அதிகாரி கைது!

13 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை :  அரசு அதிகாரி கைது!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் பெரியம்மா மகளான அக்காவே அவரை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இந்த விவகாரத்தில் ஷாகிதா பானு, மதன்குமார் ,சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா ,கார்த்தி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காசிமேடு பகுதியை சேர்ந்த பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தி, ஓய்வுபெற்ற மனநல மருத்துவர் ராஜூ, அனிதா உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை :  அரசு அதிகாரி கைது!

இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் கட்டுமான பிரிவின் தலைமை செயலாளர் கண்ணன்(53) கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சந்தியா என்பவர், சிறுமியை ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அத்துடன் அவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில் பல அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் சிறுமியை வைத்து விலை பேசியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.