ஸ்டெர்லைட் சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை கவனம்! – டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை உச்ச நீதிமன்றத்தில் தேவையான நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இதை தமிழக அரசியல் கட்சிகள், பொது மக்கள் வரவேற்று வருகின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றம் செல்லும் என்பதால் பலரும் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2020
ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின்
உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.
சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் @CMOTamilNadu மேற்கொள்ளவேண்டும். 2/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2020
சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.