கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு செக்!

 

கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு செக்!

மதுரை மாவட்டத்தில் உரிய காரணமின்றி மூடப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பாதிப்பினை காரணம் காட்டி பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து இதுவரை 120 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு செக்!

இந்நிலையில் இது குறித்து அனைத்து மருத்துவமனை நிர்வாகங்களிடமும் விளக்கம் கேட்டு தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். உரிய காரணம் இல்லாமல் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பொதுமக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியர் வினய் அறிவுறுத்தியுள்ளார்.