இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலி!

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவாக்காளி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கூலி தொழிலாளி. இவர் கடந்த 18ஆம் தேதி அன்று கோபியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலி!

வெள்ளப்பாளையம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.