டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி!

 

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி!

நாமக்கல்

நாமக்கல் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கோழிப்பண்ணை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்சிசெங்கோடு வட்டம் செக்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் எலச்சிபாளையம் அருகேயுள்ள நல்லாபாளையம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பண்ணைக்கு டிராக்டரில் வந்த தீவனங்களை இறக்கும் பணியில் குப்புசாமி ஈடுபட்டிருந்தார்.

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி!

அப்போது, திடீரென டிராக்டர் பின்னோக்கி நகர்ந்துள்ளது. இதனால், குப்புசாமி கல்லை போட்டு சக்கரம் நகராமல் தடுக்க முயற்சி செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குப்புசாமி மீது டிராக்டர் சக்கரம் ஏறியதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.