நெல்லை அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி!

 

நெல்லை அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி!

நெல்லை

நெல்லை அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரிம் அருகேயுள்ள அம்பலவாணபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேச ராஜா. கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு தனது சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

நெல்லை அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி!

அம்பலவாணபுரம் பிரதான சாலையில் வந்தபோது, கணேசராஜாவின் சைக்கிள் மீது எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேசராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசராஜா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து கணேசராஜா மனைவி புகாரின் பேரில், விக்ரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.