திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

 

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

திருவாரூர்

திருவாரூர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்க சென்ற தொழிலாளி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வம். கூலி தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு ஒன்று, கயிற்றில் சிக்கிக்கொண்டு தவித்தது.

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

இதனை கண்ட, ஆரோக்கிய செல்வம் மாட்டை காப்பாற்ற கயிற்றை இழுக்க முயன்றார். அப்போது, மின்கம்பத்தின் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து ஆரோக்கிய செல்வம் மற்றும் பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மாடும் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், பேரளம் போலீசார், உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கால்நடை மருத்துவர்களை கொண்டு மாட்டிற்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.