மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

 

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

திண்டுக்கல்

நத்தம் அருகே மின்மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த செட்டியார்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் உள்ள மோட்டாரில் குளிப்பதற்காக சென்றார்.

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

அப்போது, மோட்டார் அறையில் மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக சரவணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து, தகவல் அறிந்த நத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.