விவசாய பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

 

விவசாய பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

கோவை

பொள்ளாச்சி அருகே விவசாய பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள குள்ளிசெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

விவசாய பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பை கடப்பாரையினால் குத்தியபோது, எதிர்பாராத விதமாக அடியில் சென்ற புதைவட மின்கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பாலகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உடனிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விவசாய பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.