இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தொழிலாளி பலி!

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தொழிலாளி பலி!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பூதப்பண்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி (34). நேற்று தம்பதியினர் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – தொழிலாளி பலி!

ஶ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மேவலூர் குப்பம் என்ற இடத்தில் சென்றபோது முருகன் வாகனத்தின், மீது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மலர்கொடிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.