நெல்லையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

 

நெல்லையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

நெல்லை

நெல்லையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த வி.எம். சத்திரத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவரது மகன் தாஸ் (42). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் மின்சாரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சுவிட்ச் போர்ட்டை மாட்டியபோது எதிர்பாராத விதமாக தாஸ் மீது மின்சாரம் பாய்ந்தது.

நெல்லையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

இதில் பலத்த காயமடைந்த தாஸை, குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நெல்லையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.