தேனியில் தொழிலாளி மர்ம மரணம் – கொலையா? என போலீசார் விசாரணை!

 

தேனியில் தொழிலாளி மர்ம மரணம் – கொலையா? என போலீசார் விசாரணை!

தேனி

தேனி பேருந்து நிலையம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (53). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகாராஜன் நெஞ்சுவலி காரணமாக, தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தேனியில் தொழிலாளி மர்ம மரணம் – கொலையா? என போலீசார் விசாரணை!

இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை காலை மருத்துவ பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவமனைக்கு மகாராஜன் புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, தேனி பேருந்து நிலையம் அடுத்த சிவாஜி நகர் பகுதியில் மகாராஜன் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இது குறித்து, அவரது மனைவி செல்வி அளித்த தகவலின் பேரில், தேனி நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.