மகள் காதல் திருமணம் செய்ததால், வேதனையில் தந்தை தற்கொலை!

 

மகள் காதல் திருமணம் செய்ததால், வேதனையில் தந்தை தற்கொலை!

கோவை

கோவை அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மூத்த மகள், மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனால், தனபால் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

மகள் காதல் திருமணம் செய்ததால், வேதனையில் தந்தை தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர், காதலரை திருமணம் செய்து கொண்டார். தனது பேச்சையும் மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால், தனபால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.