சேர்ந்து வாழ மறுத்த மனைவி… வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை…

 

சேர்ந்து வாழ மறுத்த மனைவி… வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை…

திருவாரூர்

திருவாரூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (29). கூலி தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சேர்ந்து வாழ மறுத்த மனைவி… வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை…

கடந்த வாரம் கணவருடன் ஏற்பட்ட தராறில் மணிமேகலை கோபித்துக்கொண்டு, பட்டுக்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்த முனியப்பன், அவரை மீண்டும் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மணிமேகலை வீட்டிற்கு வர மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த முனியப்பன், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.