மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழலாளி தூக்கிட்டு தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழலாளி தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சோமந்துரை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (20). கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவ பாக்கியம். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த மாதம் சிவபாக்கியம் கோபித்துக் கொண்டு, குழந்தையுடன் கரட்டுப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழலாளி தூக்கிட்டு தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட மனோஜ்குமார், கடந்த மாதம் சிவபாக்கியத்தின் வீட்டிற்கு சென்று அவரை சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் சிவபாக்கியத்தின் வீட்டிற்கு சென்று சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அப்போதும், சிவபாக்கியம் அவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மனோஜ்குமார், சோமந்துரை சித்தூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனோஜ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.