மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை!

கரூர்

அரவக்குறிச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான அர்ஜுனன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி அன்று வழக்கம்போல் மதுபோதையில் வந்த அர்ஜுனன், மீண்டும் ஷர்மிளாவுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஷர்மிளா, கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த அர்ஜுனன், ஷர்மிளாவை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். ஆனால் ஷர்மிளா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அர்ஜுனன் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.