குடும்பத்தகராறில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

குடும்பத்தகராறில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பப் பிரச்சினையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தகராறில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சூரம்படி குமாரமங்கலம் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (47). இவரது மனைவி ராணி. சிவகுமாருக்கு காது கேட்காது மேலும் சரிவர பேசவமும் வராது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராணி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சிவகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தகராறில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
rep image

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவகுமாரரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.