கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் அச்சம்… தாமாக முன்வந்து உதவிய தன்னார்வலர்கள்!

 

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் அச்சம்… தாமாக முன்வந்து உதவிய தன்னார்வலர்கள்!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கொரோனாவால் இறந்தவரின் உடலை தொட உறவினர்கள் அச்சம் தெரிவித்ததால், தன்னார்வலர்கள் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொங்கமல்லப்பா (55). விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் தனது வீட்டிற்கு திரும்பிய கொங்கமல்லப்பா, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து மருத்துவர்கள் அங்கு செல்வதற்குள், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் அச்சம்… தாமாக முன்வந்து உதவிய தன்னார்வலர்கள்!

இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்டு கொங்கமல்லப்பா உயிர் இழந்ததால், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் யாரும் வராததால் அவரது உடல் வீட்டிலயே இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விடியல் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், தாமாக முன்வந்து உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்று அடக்கம் செய்தனர்.

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில், இளைஞர் மன்றத்தினர் செய்த இந்தச் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.