திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… மர்மநபர்கள் வெறிச்செயல்!

 

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… மர்மநபர்கள் வெறிச்செயல்!

திண்டுக்கல்

திண்டுக்கலில் பட்டப்பகலில் செல்போன் கடை உரிமையாளர் மீது, மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான்பாபு(35). இவர் அதே பகுதியில் செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் மீரான் பாபு சட்டாம்பிள்ளை தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர், அவரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… மர்மநபர்கள் வெறிச்செயல்!

இந்த தாக்குதல் சம்பவத்தில், பலத்த காயமடைந்த மீரான் பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், மீரான் பாபு மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீரான் பாபு மீது முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.