பைக் மீது உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து; இளைஞர் பலி!

 

பைக் மீது உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து; இளைஞர் பலி!

ராஜபாளையம் அருகே மின்கம்பம் விழுந்ததால், பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் சரவணன். இவர் இன்று காலை ராஜபாளையம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் இருந்த உயரழுத்த மின்கம்பம் திடீரென சரிந்து, சரவணன் சென்ற பைக்கின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் மின்கம்பத்தின் அடியில் சிக்கிக் கொண்ட சரவணன் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பைக் மீது உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து; இளைஞர் பலி!

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததன் காரணம் என்ன? ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.