“கமலே வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை”

 

“கமலே வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை”

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி விட்டன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்தல், காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது . அதேபோல் அதிமுகவும் தேர்தல் பணிக்கான நிர்வாகிகளை நியமித்து பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளது.

“கமலே வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை”

கமல்ஹாசனும் நேற்று முதல் நாள் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது. அதில், புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் கமல்ஹாசன் கேட்ட டார்ச் லைட் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கமலே வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.