செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவு!
Apr 15, 2021, 14:31 IST1618477293000
உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை கே.விஸ்வநாதன் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 92. தென்னக ரயில்வேயில் பொது மேலாளராகப் பணியாற்றினார். ஆனந்த் உள்பட அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விஸ்வந்தான் ஆனந்தின் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் என்று ஆனந்தின் மனைவி அருணா கூறியிருக்கிறார். மேலும் ஆன்ந்தின் சாதனைகளைக் கண்டு அவர் பெருமிதம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
விஸ்வந்தான் ஆனந்த் 2000ஆம் ஆண்டு முதன் முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதைத் தொடர்ந்து 2007,2008,2010,2012 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.