கண் தெரியாத மாமன் -உதவிக்கு வந்த உறவுப்பெண் – ஆறு மாதமாக பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

கண் தெரியாத மாமன் -உதவிக்கு வந்த உறவுப்பெண் – ஆறு மாதமாக பெண்ணுக்கு நடந்த கொடுமை


பார்வையற்ற நபருக்கு உதவி செய்து வந்த உறவுக்கார பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .

கண் தெரியாத மாமன் -உதவிக்கு வந்த உறவுப்பெண் – ஆறு மாதமாக பெண்ணுக்கு நடந்த கொடுமை


தெலுங்கானாவில் ஹைதராபாத்தின் ஜகத்கிரிகுட்டா பகுதியில் 13 வயதான பெண்ணொருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் வசித்து வந்தார் .அந்த தாய் மாமனுக்கு கண் தெரியாது .அதனால் அவர் அந்த 13 வயதான பெண்ணை தனக்கு உதவியாக வைத்திருந்தார் .அந்த பெண் அவருக்கு பல மாதங்களாக பணிவிடைகள் செய்து வந்தார் .
இந்நிலையில் அந்த தாய் மாமன் அந்த பெண்ணை கடந்த ஆறு மாதங்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் கரப்பமுற்றுள்ளார் .இது தெரியாமல் அந்த பெண்ணும் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளார் .இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் திடீரென் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .அதனால் அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு உறவினர்கள் கூட்டி சென்றார்கள் .அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து அதை அந்த பெண்ணின் உறவினர்களிடம் கூறினர் .அதை கேட்ட அந்த உறவினர்கள் ஷாக் ஆனார்கள் .பின்னர் இதற்கு காரணமான அந்த கண் தெரியாத மாமன் மீது போலிஸில் புகார் கூறினார்கள் .பிறகு அவர் மீது வழக்கு பதிந்து அந்த பார்வையற்ற நபரை ஜகத்கிரிகுட்டா போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.