சிவ சேனா, தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி தர்மத்தை பின்பற்ற சொல்லுங்க.. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்

 

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி தர்மத்தை பின்பற்ற சொல்லுங்க.. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசில் இடம்பெற்றுள்ள சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி தர்மத்தை பின்பற்ற அறிவுறுத்துமாறு சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு யாரும் எதிர்பாராத வகையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தன. கூட்டணிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தாலும் கடந்த ஒராண்டுக்கு மேலாக கூட்டணி அரசாங்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தலை தூக்கியுள்ளது.

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி தர்மத்தை பின்பற்ற சொல்லுங்க.. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்
சோனியா காந்தி

மகாராஷ்டிரா காங்கிரஸ் பொது செயலாளர் விஷ்வபந்து ராய் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தில் காங்கிரஸ் உள்ளது. அதேவேளையில் சிவ சேனாவும், தேசியவாத காங்கிரசும்தான் ஆட்சியை நடத்துவதில் பங்காற்றுவது போல் தோன்றுகிறது. காங்கிரஸை ஒரு கரையான் போல் தேசியவாத காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது.

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி தர்மத்தை பின்பற்ற சொல்லுங்க.. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்
காங்கிரஸ்

மகாராஷ்டிரா அரசாங்கத்தில் பெரும்பாலான காங்கிரஸ் அமைச்சர்கள் அடிமட்ட அளவில் அமைப்பில் எந்த பணியையும் பெறவில்லை. அதேசமயம் பொதுமக்களுக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் நம்ம கட்சி அமைச்சர்கள் துறை தெரியாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் புத்திசாலித்தனமான யுத்தி மற்றும் தங்களது சொந்த கட்சியை வளர்ப்பதில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் நமது கட்சியை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் அதனை தடுக்க தவறி விட்டோம். 2019 தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நம் கட்சியிலிருந்து தொண்டர்கள் வெளியேறுவதை தவிர்க்க சில அவசியமான உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். கூட்டணி தர்மத்தை பின்பற்றும்படி சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அறிவுறுத்துவது அவசியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.