அன்பிற்குரிய கங்கனா, உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்: நடிகர் விஷால்

 

அன்பிற்குரிய கங்கனா, உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்: நடிகர் விஷால்

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதை தொடர்ந்து மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதுடன் கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடிக்க தொடங்கியது அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், நடிகர் விஷால் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அன்பிற்குரிய கங்கனா, உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பது குறித்து குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. ஆனால் இது உங்கள் தனிப்பட்ட பிரச்னை இல்லை. இருப்பினும், அரசின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு வலிமையாக இருந்தீர்கள். நீங்கள் தற்போது செய்யும் செயல்கள், 1920 ஆண்டுகளில் பகத்சிங் செய்ததை போலவே உள்ளது. பிரபலங்களுக்கும் சரி, சாதாரண மக்களுக்கும் சரி, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.