விருதுநகரில் மேலும் 284 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

விருதுநகரில் மேலும் 284 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் தற்போது 14,923 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் பாதித்து குறைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

விருதுநகரில் மேலும் 284 பேருக்கு கொரோனா உறுதி; திருவண்ணாமலையிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 284 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்துள்ளது. அதே போல திருவண்ணாமலை மாவட்டத்திலும் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,774 ஆக அதிகரித்துள்ளது. அதில் 21 பெண்கள் மற்றும் 1 குழந்தைக்கு இன்று கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.