விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

 

விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,067 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 270 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 5 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே மாதத்தில் 20 மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.