’உண்மை இருந்தால் பயம் தேவையில்லை’ விராட் கோலி ட்விட் சொல்வது என்ன?

 

’உண்மை இருந்தால் பயம் தேவையில்லை’ விராட் கோலி ட்விட் சொல்வது என்ன?

கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டெளன் நாட்கள் நீட்டித்துக்கொண்டே செல்லப்படுகின்றன. இந்நிலையில் பொழுதுபோக்க ஆன்லை விளையாட்டுகள் சூடுபிடித்து வருகின்றன. அதிலும் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்கள் த்ரிலோடு முழுநேரமும் அதில் மூழ்குபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாடுகளில் பலரையும் ஈர்த்தது ரம்மி எனும் ஒருவகை சீட்டாட்டம். இந்த விளையாட்டுக்கு டிவி, சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும். அதனால் ஏராளமான இளைஞர்கள் அதில் பணம் ஆடி வந்தனர்.

’உண்மை இருந்தால் பயம் தேவையில்லை’ விராட் கோலி ட்விட் சொல்வது என்ன?

அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யச் சொல்லி கோரிக்கை விடுத்துவந்தனர். சென்னையில் கூட ஓர் இளைஞன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டான் என்ற செய்தி சில நாள்களுக்கு முன் வெளிவந்தது.

இந்த விளையாட்டுக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா நடித்திருந்தனர். சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக இவர்கள் மீது புகார் பதியப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்னும் சில நாள்களில் வரவிருக்கிறது.

’உண்மை இருந்தால் பயம் தேவையில்லை’ விராட் கோலி ட்விட் சொல்வது என்ன?

இதனால் விராட் கோலி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற செய்தி நேற்றிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாவிலும் இதுகுறித்த விவாதம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலி ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார். ’உங்களிடம் உண்மை இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படும் சூழலில் இருக்கிறார் எனும் பேச்சு இருக்கும் நிலையில் இந்த ட்விட் மூலம் தன்னிடம் உண்மை இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.