மனைவியின் பிரசவத்துக்கு லீவ் எடுக்கும் விராட் கோலி

 

மனைவியின் பிரசவத்துக்கு லீவ் எடுக்கும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரரான விராட் கோலியின் தலைமையில்தான் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

மனைவியின் பிரசவத்துக்கு லீவ் எடுக்கும் விராட் கோலி

இந்தத் தொடரில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அதற்கான வீரர்கள் பட்டியல் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் ஷர்மா பெயர் இல்லாதது சர்ச்சையானது. தற்போது டெஸ்ட் அணியில் ரோஹித் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடர் தொடங்கிய நாட்களில் விராட் கோலி தம் மனைவி அனுஷ்கா ஷர்மா கருவுற்றிருப்பதை சோஷியல் மீடியாக்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அனுஷ்காவுக்கு பிரசவம் நடக்கக்கூடும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர்கள்.

மனைவியின் பிரசவத்துக்கு லீவ் எடுக்கும் விராட் கோலி

மனைவியின் பிரசவத்தின்போது உடனிருந்து கவனித்துக்கொள்ள ஆசைப்படும் விராட் கோலி இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐயிடம் அந்த நேரத்தில் லீவ் கேட்டிருக்கிறார். அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும், அவர் இந்தியா திரும்புகிறார். மீதமிருக்கும் போட்டியை யார் வழிநடத்துவார் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்கப்பட வில்லை.