விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

 

விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

புதுக்கோட்டை

அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றின்போது 14ஆவது முன்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியே குறிப்பிடப்பட்டு உள்ள எண்ணில் தவறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த இயந்திரத்தை எண்ண வேட்பாளர்களின் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

இதனை அடுத்து, குறிப்பிட்ட பெட்டியை பின்னர் எண்ணுவதா? அல்லது இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதா? என்பது தொடர்பாக அதிகாரிகளுடன், வேட்பாளர்களும், அவர்களது முகர்களுக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்து வருகிறார்.