வாயோடு வாய் வைத்து… தாயை காப்பாற்ற மகள்களின் பாசப்போராட்டம் : மனதை உலுக்கும் சம்பவம்!

 

வாயோடு வாய் வைத்து… தாயை காப்பாற்ற மகள்களின் பாசப்போராட்டம் : மனதை உலுக்கும் சம்பவம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக பரவி வரும் நிலையில், வட மாநிலங்களில் மனதை உலுக்கும் பல்வேறு துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உத்திரப்பிரதேசம் அருகே உயிருக்கு போராடிய தாயை காப்பாற்ற மகள்கள் வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்த வீடியோ வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாயோடு வாய் வைத்து… தாயை காப்பாற்ற மகள்களின் பாசப்போராட்டம் : மனதை உலுக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவி கிடைக்காமல் நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் மூச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த நோயாளியின் மகள்கள், ஆக்சிஜனுக்காக பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்துள்ளனர். ஆனால், ஆக்சிஜன் கிடைக்க வில்லை. இதனால் தாயாரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என நினைத்த மகள்கள், வாயோடு வாய் வைத்து சுவாசம் வழங்கியுள்ளனர்.

இதை அங்கிருந்த நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட சுகாதாரத் துறையினர் உடனடியாக அந்தப் பெண் நோயாளியை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அந்த நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆக்ராவில் இதே போன்ற சம்பவமொன்று அரங்கேறியது. ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடிய தனது மனைவியை காப்பாற்ற கணவர், வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்த புகைப்படம் வைரலானது நினைவுகூரத்தக்கது.