பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

 

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பல கூட்டு வழிபாடுகளுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால், பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மக்கள் வீடுகளிலேயே சிலைகளை வைத்துக் கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

இந்த நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரியும் பொது இடங்களில் சிலை வைக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும் பாஜகவை சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ராமசாமி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன் படி விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.