விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா!

 

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,790 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 059பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை அரசு அறிவித்தபடி 5,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு காவலர் உள்ளிட்ட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,571 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.