“சொந்த கட்சியிலேயே பாதுகாப்பு இல்லங்க” … பாஜக மாவட்ட தலைவர் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார்!

 

“சொந்த கட்சியிலேயே பாதுகாப்பு  இல்லங்க” … பாஜக மாவட்ட  தலைவர் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார்!

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாஜகவை சேர்ந்த காயத்ரி என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

காயத்ரி விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ள காயத்ரி மாநில தலைமை பாலியல் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“சொந்த கட்சியிலேயே பாதுகாப்பு  இல்லங்க” … பாஜக மாவட்ட  தலைவர் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார்!

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளராக உள்ளேன். மாவட்ட தலைவர் கலியவரதன் நான் கட்சியில் இணையும் போது உன்னை பற்றி பெரிய ஆளாக ஆக்குவேன் என்று நயவஞ்சகமாக பேசி என்னிடமிருந்து சுமார் 5 லட்சம் பணம் ஏமாற்றியுள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்.

“சொந்த கட்சியிலேயே பாதுகாப்பு  இல்லங்க” … பாஜக மாவட்ட  தலைவர் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார்!

என்னைப் பற்றி யாரிடமாவது கூறினால் தீர்த்து கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்தார். தற்போது நான் நிற்கதியாக உள்ளேன். என்னைப் போன்ற பல பெண்களிடம் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும். விசாரணை குழு விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். விசாரணை செய்து எனக்கு நீதி கிடைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.