வேளாங்கண்ணி தனியார் விடுதியில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
நாகை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில், விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ். இவரது மகன் ஜார்ஜ் லூர்துராஜ் (24). இவர் கடந்த 7ஆம் தேதி அன்று வேளாண்ணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது.
இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டியும் லூர்துராஜ் திறக்காததால், அவர்கள் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, லூர்துராஜ் குளியல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இதனை தொடர்ந்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, லூர்துராஜ் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.