குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- கள்ளக்காதலே காரணம்

 

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- கள்ளக்காதலே காரணம்

சென்னையை சேர்ந்த பிரேம் குமார் என்பவருடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- கள்ளக்காதலே காரணம்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மதுரா-மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகனுக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் செளடேப்பள்ளி மண்டலம் ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி(23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று கோகுல்(4) மற்றும் பிரதீப்(2) இரண்டு ஆகிய மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது.


இந்த சண்டை பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வீட்டில் கணவன் இல்லாத நேரம் பார்த்து துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாகத் தாக்கி அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் காயமடைந்த குழந்தை பிரதீப்பை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது தனது தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் துளசி கணவரை பிரிந்து தனது தாய் வீடான ஆந்திராவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். துளசி தனது தாயார் வீட்டுக்கு வந்த பிறகு துளசியின் செல்போன் வடிவழகனிடம் கிடைத்துள்ளது அப்போது செல்போனில் உள்ள
வீடியோ காட்சிகளை பார்த்த குழந்தையை தாய்மையை மறந்து மிருகத்தனமாக துளசி தாக்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ காட்சிகளை தனது உறவினர்கள் நண்பர்களிடம் காண்பித்த நிலையில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்- கள்ளக்காதலே காரணம்


இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தாய் துளசி மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு வந்தனர். பின்னர் சோமலா காவல் நிலைய போலீசார் உதவியுடன் துளசியை கைது செய்ய சென்றனர். அப்போது துளசி ஒரு கோழி பண்ணையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது துளசியை சோமலா போலீசாருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து வந்த தனிப்படை காவல்துறையினர் கைது செய்து செஞ்சிக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் துளசிக்கு சென்னையை சேர்ந்த பிரேம் குமார் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பால் இப்பிரச்சனை உருவானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை சென்னை விரைந்துள்ளது